புதிய சுகாதார நடைமுறைகளை கொண்ட சில கட்டுப்பாடுகள் நாளை முதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய சுகாதார நடைமுறைகளை கொண்ட சில கட்டுப்பாடுகள் நாளை முதல்!


புதிய சுகாதார நடைமுறைகளை கொண்ட சில கட்டுப்பாடுகள் நாளை (15) முதல் நடைமுறைப்படுத்த உள்ளன.

அதன்படி திருமண நிகழ்வுகளை நாளை முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுளர்த்து. 

மேலும் மண்டபங்களில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய அளவில் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ளும் வகையில் திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

வௌிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் மரண சடங்கில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் 15 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், பல விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில், இருக்கை திறனுக்கமைய, 30 சதவீதம் வரை, மக்களை உணவருந்த இடமளிக்கலாம். ஆனால், மதுபானம் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை, அதிகபட்சம் 50 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு மண்டபத்தில் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.