இதுவரை கொரோனா தடுப்பூசியினை பெறாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஒரு தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாக அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெறுவதற்கான தகுதியுடைய பலர் அதனைச் செலுத்திக்கொள்ளாதுள்ளனர். தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.
எனவே தடுப்பூசியினை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்!
http://eohfs.health.gov.lk/food/index.php?option=com_content&view=article&id=31&Itemid=173&lang=en