என்னை தான்தோன்றித்தனமாக கட்சியிலிருந்து விலக்க முடியாது! நான் நீதிமன்றை நாடத் தயார்! -டயனா கமகே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

என்னை தான்தோன்றித்தனமாக கட்சியிலிருந்து விலக்க முடியாது! நான் நீதிமன்றை நாடத் தயார்! -டயனா கமகே


எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்பதிகள் காணப்பட்டால் என்னிடத்தில் தெளிவுபடுத்தல்களை பெற்றிருக்க வேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்ற முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.


எதுவுமின்றி தான்தோன்றித்தனமாக அடிப்படை உறுப்பினரான என்னை கட்சியிலிருந்து விலக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.


அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி முறையற்ற வகையில் எனது விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்தால் நீதிமன்றத்தினை நாடுவதற்கும் தயராக உள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


20ஆவது திருத்தச்சட்டத்தின் ஆதரவாக வாக்களித்தமை உட்பட கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் டயனா கமகேயை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடத்தில் கோரியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஆர்.ராம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.