ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரதமரின் வாக்குறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரதமரின் வாக்குறுதி!

சில தாமதங்கள் ஏற்பட்டாலும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அரசாங்கம் தனது கடமைகளை நிச்சயமாக நிறைவேற்றும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை புனித லுசிய பேராலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முதற்கட்டமாக புதிய வீடுகள் வழங்கும் நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேராயர், உதவிப் பேராயர் ஜே.டி.அந்தோணியும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இருந்து 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட 33 குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையிலும் குறைந்த வருமான அடிப்படையிலும் புதிய வீடுகள் வழங்கப்படும். ஒரு வீட்டின் பெறுமதி 40 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.