சில தாமதங்கள் ஏற்பட்டாலும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக அரசாங்கம் தனது கடமைகளை நிச்சயமாக நிறைவேற்றும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை புனித லுசிய பேராலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முதற்கட்டமாக புதிய வீடுகள் வழங்கும் நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேராயர், உதவிப் பேராயர் ஜே.டி.அந்தோணியும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இருந்து 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட 33 குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையிலும் குறைந்த வருமான அடிப்படையிலும் புதிய வீடுகள் வழங்கப்படும். ஒரு வீட்டின் பெறுமதி 40 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
கொட்டாஞ்சேனை புனித லுசிய பேராலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு முதற்கட்டமாக புதிய வீடுகள் வழங்கும் நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேராயர், உதவிப் பேராயர் ஜே.டி.அந்தோணியும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இருந்து 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட 33 குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையிலும் குறைந்த வருமான அடிப்படையிலும் புதிய வீடுகள் வழங்கப்படும். ஒரு வீட்டின் பெறுமதி 40 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)