தெஹிவளை பள்ளிவாசல் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைதாகி நீதிமன்றில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெஹிவளை பள்ளிவாசல் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைதாகி நீதிமன்றில் அனுமதி!


தெஹி­வளை பாத்­தியா மாவத்­தையில் அமைந்­துள்ள பாத்­தியா மஸ்ஜித் என்று அழைக்­கப்­படும் மத்­ர­ஸதுல் பெளசுல் அக்பர் பள்­ளி­வாசல் வாயில் நேற்று முன்தினம் (15) காலை 8.00 மணி­ய­ளவில் விஷ­மி­யொ­ரு­வனால் சேதமாக்கப்பட்டுள்­ளது.


விரைந்து செயற்­­பட்ட கொஹு­வலை பொலிஸார் CCTV பதிவு மற்றும் தாக்குதல்தாரி வருகை தந்த மோட்டார் சைக்­கிளின் பதி­வி­லக்கம் என்பனவற்றின் மூலம் அவரை கைது செய்­து நேற்று அவரை நீதிவான் நீதிமன்ற நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தினர்.


பள்­ளி­வாசல் கதவு மோட்டார் சைக்­கிளால் மோதப்­பட்டு தாக்­கப்­பட்­ட­போது முன்­னா­லுள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவு செய்­துள்ளார். இதனைய­டுத்து அவ­ரது வீட்டுக் கதவும் தாக்­கப்­பட்­டது.


பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் வசிக்கும் ரம்ஸீன் அஸீஸ் மற்றும் பள்­ளி­வாசல் முஹத்தினார் எம்.அலியார் ஆகியோர் கொஹு­வலை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்­பான முறை­ப்பா­டு­களைப் பதிவு செய்­துள்­ளனர். 


மேலும் சந்தேக நபர் போதியவத்­தயைச் சேர்ந்­தவர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இப்­பள்­ளி­வாசல் சட்­ட­வி­ரோத நிர்­மாணம் என நகர அபி­வி­ருத்தி அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


-விடிவெள்ளி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.