தலா 855 குற்றச்சாட்டுகளின் கீழ் பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலா 855 குற்றச்சாட்டுகளின் கீழ் பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காததன் ஊடாகக் கடமை தவறியமை உள்ளிட்ட தலா 855 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


நாமல் பலல்லே, ஆதித்யா பட்டபெதிகே மற்றும் மொஹமட் இர்சதீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தினால் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான, சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், சாட்சியாளர்களாக 1,215 நபர்களை பெயரிட்டுள்ளார்.


இதன்படி, வழக்கு விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக நீதிபதிகள் ஆயம் அறிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.