8 மணி நேர சத்திர இருதய சத்திர சிகிச்சைக்கு பின்னர் எம்.பி ஹரின்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

8 மணி நேர சத்திர இருதய சத்திர சிகிச்சைக்கு பின்னர் எம்.பி ஹரின்!


உயிரை சவாலுக்கு உட்படுத்தக் கூடிய மிகவும் ஆபத்தான 8 மணித்தியால சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.


இருதய கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹரீனுக்கு இன்றைய தினம் மிகவும் பாரதூரமான சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது.


இந்த சத்திர சிகிச்சையானது மிகவும் ஆபத்தானது. உயிரையை சவாலுக்கு உட்படுத்தக் கூடியது என ஹரீன் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில், தமக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது எனவும் பிரார்தனை செய்த அன்பை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி எனவும் ஹரின் பெர்னாண்டோ தனது அதிகாரபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.அவரது ஊடகப் பிரிவினால் இந்த பதிவு இடப்பட்டுள்ளது.


கடந்த மே மாதமும் ஹரீனுக்கு ஆபத்தான இருதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.