WATCH: இத்தாலியில் பிரதமை முற்றுகையிட்ட இலங்கையர்கள்! நடந்தது இதுதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: இத்தாலியில் பிரதமை முற்றுகையிட்ட இலங்கையர்கள்! நடந்தது இதுதான்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இத்தாலி - போலோக்னா நகரில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் பிரதமரை சூழ்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து நேற்று (12) பிற்பகல் வெளியேறிய போது அவரை காண்பதற்காக பெருந்தொகையான மக்கள் ஹோட்டல் வளாகத்தின் அருகே ஒன்றுகூடினர்.


பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியாருக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தங்களது கையடக்கத் தொலைபேசிகளினூடாக புகைப்படங்களை எடுப்பதற்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கும் முயற்சித்தமையை காணக் கிடைத்தது.


ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்றுவதற்காக சென்ற கௌரவ பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்து மரியாதை செய்தார்.


பிரதமர் நேற்று பிற்பகல் ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியதுடன், இம்மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.