WATCH: காபூலில் அமெரிக்கப் படையினரால் சேதமாக்கப்பட்ட விமானங்களை மீண்டும் இயங்க வைக்க முடியும்! தலிபான் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: காபூலில் அமெரிக்கப் படையினரால் சேதமாக்கப்பட்ட விமானங்களை மீண்டும் இயங்க வைக்க முடியும்! தலிபான் தெரிவிப்பு!


ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகளினால் சேதமாக்கப்பட்ட நிலையில் விட்டுச் செல்லப்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை தம்மால் பழுதுபார்த்து மீண்டும் இயக்க முடியும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் வெளியேறின.


காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் எண்ணிக்கையான வான்கலங்கள் மற்றும் இராணுவ வாகனங்களை அமெரிக்கப் படையினர் விட்டுச் சென்றிருந்தனர்.


எனினும் அவை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


73 வான்கலங்கள், 70 கவசவாகனங்கள், 27 ஹம்வீ ரக இராணுவ வாகனங்களை அமெரிக்கப் படையினர் செயலிழக்கச் செய்துள்னர் எனவும், அவை மீண்டும் ஒரு போதும் பறக்கமாட்டா, அவை எவராலும் மீண்டும் ஒரு போதும் இயக்கப்பட முடியாது என அமெரிக்கப் படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தலைவரான ஜெனரல் கென்னத் மெக்கன்ஸி தெரிவித்தார்.


எனினும், அவற்றை தம்மால் செப்பனிட்டு மீண்டும் இயக்க முடியும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


தலிபான் தலைவர்களில் ஒருவரான அனஸ் ஹக்கானி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்விமான நிலையத்தில் உள்ளவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானவையாகும். இவற்றை எமது பொறியியலாளர்கள் செப்பனிட்டு, மீண்டும் செயற்பட வைக்க வேண்டும்என நாம் விரும்புவோம்” என  கூறியுள்ளார்.



-மெட்ரோ

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.