VIDEO: நுகர்வோர் விவகார தலைவருக்கு இராஜினாமா செய்யுமாறு மரண அச்சுறுத்தல் - நாட்டின் ஊழல் தொடர்பில் பல விடயங்கள் அம்பலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நுகர்வோர் விவகார தலைவருக்கு இராஜினாமா செய்யுமாறு மரண அச்சுறுத்தல் - நாட்டின் ஊழல் தொடர்பில் பல விடயங்கள் அம்பலம்!

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன குறிப்பிடுகையில், இன்று நாட்டின் செழிப்புக்கான பார்வை இல்லை என்றும், மோசடி செய்பவர்கள் விரும்பியபடி அரசாங்கம் செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.


அதற்கு எதிராகச் செயல்பட்டதற்காக தனக்கு மரண அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், விரைவில் நாட்டுக்கு பாதகமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அவர் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும், அமைச்சருக்கு தேவைப்பட்டால் கையெழுத்தடுவதாலவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இணையதள அலைவரிசை ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

பால் மா, கோதுமை மா மற்றும் சீமேந்து விலையை விரைவில் அதிகரிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சதொச நிறுவனத்தில் பல ஊழல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்த அவர், இவ்வாறான திருட்டை ஒழிக்க முடியாது என்றும் அதற்கேற்ப முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.