நாட்டில் 20 முதல் 29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் செப்டம்பர் 21 முதல் வட மாகாணம் முழுவதும் ஆரம்பிக்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான தடுப்பூசியை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.
20- 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஃபைசர் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. (யாழ் நியூஸ்)