இலங்கை கபடி வீரர் அன்வர் சஹீத் பாபா இந்திய புரோ கபடி லீக் (PKL) இற்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கபடி வீரர் அன்வர் சஹீத் பாபா இந்திய புரோ கபடி லீக் (PKL) இற்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்!

இலங்கை கபடி வீரரும், இலங்கை கடற்படை அதிகாரியுமான அன்வர் சஹீத் பாபா இந்திய புரோ கபடி லீக் (PKL) போட்டிகளுக்காக, தமிழ் தலைவாஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.

அன்வர் சஹீத் பாபா 1 மில்லியன் இந்தியா ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதோடு, இவ்வாறான சம்பவம் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகும்.

புரோ கபடி லீக்கின் (PKL) எட்டாவது சீசனுக்கான ஏலம் மும்பையில் ஆகஸ்ட் 29-31 வரை நடைபெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் மக்களால் பார்க்கப்படும் லீக் (தொடர்) இதுவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்தப்படாத PKL இவ்வருடம் (2021) டிசம்பர் இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அம்பிலிப்பிட்டியைச் சேர்ந்த அன்வர் சஹீத் பாபா, இந்த ஆண்டு PKL போட்டிக்காக வாங்கப்பட்ட 22 வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் ஆவார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.