நாட்டின் சிறைச்சாலைகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே தனது நண்பர்களுடன் மதுபோதையில், வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்குச் சென்ற சம்பவம் தற்போது சூடு பிடித்துள்ளது.
இதன் போது சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்து உயிர் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதானது, கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், குடிபோதையில் லொஹான் ரத்வத்தே சிறைச்சாலைக்குள் நுழைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவங்களின் போது சிசிடிவி ஆதாரங்களை சேதப்படுத்துதல் அல்லது அழிக்கும் செயற்பாட்டை உடனடியாக தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சராசரி குடிமகன் இந்தச் செயலைச் செய்திருந்தால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலிடப்பட்டிருப்பர் என்பதையும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.
இதன் போது சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்து உயிர் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதானது, கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், குடிபோதையில் லொஹான் ரத்வத்தே சிறைச்சாலைக்குள் நுழைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவங்களின் போது சிசிடிவி ஆதாரங்களை சேதப்படுத்துதல் அல்லது அழிக்கும் செயற்பாட்டை உடனடியாக தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சராசரி குடிமகன் இந்தச் செயலைச் செய்திருந்தால், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலிடப்பட்டிருப்பர் என்பதையும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.