மேசையில் தலையை சாய்த்தவாறு இறந்துகிடந்த உப பொலிஸ் பரிசோதகர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேசையில் தலையை சாய்த்தவாறு இறந்துகிடந்த உப பொலிஸ் பரிசோதகர்!


பணிசெய்யும் இடத்தில் தனது மேசையில் தலையை சாய்ந்த வண்ணமே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் களுத்துறை – பெந்தோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரான 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார். இவர் காலி – பலப்பிட்டிய, காத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


போக்குவரத்துப் பிரிவில் இவர் கடமையாற்றிய நிலையில் இரவு வேளையில் கடமைக்குச் சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிய பின், மேசையில் தலையை சாய்த்தவாறு இருந்துள்ளார்.


அதிகாரிகள் அவர் தூங்கிக் கொண்டிருப்பதாகவே நினைத்த போதிலும் நீண்ட நேரத்திற்குப் பின்னர் அவரை நெருங்கிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது.


குறித்த பொலிஸ் அதிகாரி அவ்விடத்திலேயே மரணித்திருக்கின்றார்.


எனினும் இவரது மரணத்திற்கு கொரோனா தொற்று காரணமா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.