மதுபான விற்பனை நிலையங்களை திறந்தன் காரணம் இது தான் - மனம் திறந்த அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதுபான விற்பனை நிலையங்களை திறந்தன் காரணம் இது தான் - மனம் திறந்த அமைச்சர்!

மதுபான விற்பனை நிலையங்களை திறந்தன் மூலம் மக்கள் கள்ளச் சாராயத்தை அருந்தி உயிரிழப்பது தடுக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் வைத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் சாராய போத்தல் ஒன்றின் விலை 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டது என்று கூறிய அவர்,

மதுபான விற்பனை நிலையங்களை திறந்தன் மூலம் மக்கள் கள்ளச் சாராயத்தை அருந்தி உயிரிழப்பது தடுக்கப்பட்டது எனறும் தெரிவித்துள்ளார். மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது என அரசாங்கம் எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம்.

அரசுக்கு நிதி கிடைக்கும் பிரதான மூலங்கள் சில உள்ளன. நாடு முடக்கப்பட்டிருந்தாலும் அவை இயங்க வேண்டும் எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.