அரிசி, பால்மா, சீனியை தொடர்ந்து நாட்டில் உள்ளாடைகளுக்கு நீண்ட வரிசை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரிசி, பால்மா, சீனியை தொடர்ந்து நாட்டில் உள்ளாடைகளுக்கு நீண்ட வரிசை!

அரிசி, பால்மா மற்றும் சீனி வரிசைகளை தொடர்ந்து உள்ளாடை வரிசையில் இருக்கும் சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக அரசு செவிலியர்கள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுல்பினர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிர்வாகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டை மேலும் படுகுழியில் இழுக்காமல் தயவுசெய்து வீட்டுக்கு செல்லுமாறு ராஜபக்ச ஆட்சியை கேட்டுக்கொள்வதாக கூறினார்.

இறக்குமதிகள் மீதான அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிலதிபர்கள் பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என்று கூறிய அவர், எதிர்காலத்தில் ஒரு ஆப்பிள் கூட சாப்பிட முடியாமல் போகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு வாகனத்திற்கு டயர்கள் கிடைக்காது என்று கூறிய அவர், பொருளாதார நிர்வாகம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.