ஈஸ்டர் தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படலாம்! அடிப்படைவாத, இனவாத அமைப்புக்களை உடனடியாக தடை செய்யுங்கள்! -ஞானசார தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படலாம்! அடிப்படைவாத, இனவாத அமைப்புக்களை உடனடியாக தடை செய்யுங்கள்! -ஞானசார தேரர்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை போன்று மீண்டுமொரு தாக்குதல் நாட்டில் நடத்தப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (09) விசேட கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சிவில் மற்றும் நபர்களின் ஊடாக பாதுகாப்பு பிரிவை அதைரியப்படுத்தும் வகையிலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதற்கான சூழ்ச்சி நாட்டிற்குள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் இருப்பதாக அந்தக்கடிதத்தில் பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.

மேலும், மிகச்சிறிய பாதுகாப்பு விரிசலைப் பயன்படுத்தி அதனூடாக ஈஸ்டர் தாக்குதலைப் போன்ற ஒரு தாக்குதலை நடத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டுவது போன்ற பாரிய ஆபத்து நாட்டிற்கு முன்பாக இருக்கின்றது என்றும் ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அடிப்படைவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறியத்தக்கதாக பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான அவசியத்தையும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டில் செயற்படுகின்ற மேலும் சில அடிப்படைவாத மற்றும் இனவாத அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.    

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.