பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு!


நாடளாவிய ரீதியில் தரம் 7 முதல் 13 வரையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சூம் தொழிநுட்பத்தின் வாயிலான இன்றைய தினம் (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, 12 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டு வருவதனால் கல்வியில் மாணவர்கள் பாரிய பின்னடைவினை சந்தித்துள்ளமையினால் அதனை நிவர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியினை செலுத்துவதன் மூலம் மாணவர்களின்க கல்வி நடவடிக்கையினை மீண்டும் வழமைக்கு கொண்டு வரமுடியும் என சுகாதார அமைச்சர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.