நாடளாவிய ரீதியில் தரம் 7 முதல் 13 வரையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சூம் தொழிநுட்பத்தின் வாயிலான இன்றைய தினம் (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதற்கமைய, 12 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டு வருவதனால் கல்வியில் மாணவர்கள் பாரிய பின்னடைவினை சந்தித்துள்ளமையினால் அதனை நிவர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியினை செலுத்துவதன் மூலம் மாணவர்களின்க கல்வி நடவடிக்கையினை மீண்டும் வழமைக்கு கொண்டு வரமுடியும் என சுகாதார அமைச்சர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.