இராஜாங்க அமைச்சர் தனது நண்பர்கள் பலருடன் வெலிக்கடை சிறை வளாகத்திற்குள் நுழைந்து கலவரமாக நடந்து கொண்டதாக தி மார்னிங் பத்திரிகை தெரிவிக்கிறது.
அமைச்சர் தனது நண்பர்களுக்கு தூக்கு மேடையை காட்ட விரும்பியதாகவும், அவர் வரும் போது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அமைச்சர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்றும் அவர் நிற்க முடியாத அளவுக்கு குடிபோதையில் இருந்தார் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழு சிறைக்குள் நுழைவதைத் தடுக்க முயன்ற அதிகாரிகளையும் அமைச்சரும் அவரது நண்பர்களும் திட்டியதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இது போன்ற சம்பவம் தொடர்பில் தனக்கு அறியப்படுத்தப்படவில்லை என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
அமைச்சர் தனது நண்பர்களுக்கு தூக்கு மேடையை காட்ட விரும்பியதாகவும், அவர் வரும் போது குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அமைச்சர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்றும் அவர் நிற்க முடியாத அளவுக்கு குடிபோதையில் இருந்தார் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழு சிறைக்குள் நுழைவதைத் தடுக்க முயன்ற அதிகாரிகளையும் அமைச்சரும் அவரது நண்பர்களும் திட்டியதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இது போன்ற சம்பவம் தொடர்பில் தனக்கு அறியப்படுத்தப்படவில்லை என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)