சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்தின் கூற்றுக்கு பதிலடி கொடுத்த வைத்திய் நிபுணர் ரவி ரன்னன்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்தின் கூற்றுக்கு பதிலடி கொடுத்த வைத்திய் நிபுணர் ரவி ரன்னன்!!!

வைரஸின் புதிய திரிபுகள் நாட்டிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் எந்தவொரு நாட்டிலும் இல்லையென்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாதென வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.

அதிதீவிர எல்லைக்கட்டுப்பாடுகள் மற்றும் அதிக எண்ணிக்கையான பரிசோதனைகளின் ஊடாக புதிய திரிபுகள் உள்நுழைவதையும் அவை வேகமாகப் பரவுவதையும் கட்டுப்படுத்த முடியுமென்று சுகாதாரக் கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் அடையாளம் காணப்படலாம்.



புதிய வைரஸ் திரிபொன்று ஒரு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான பொறிமுறைகள் எந்தவொரு நாட்டிலும் இல்லையென்று பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

அதுகுறித்த செய்தியை மேற்கோள்காட்டி வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய அவரது உத்தியோகபூர்வ தனது டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.