ஐக்கிய அமீரகத்துடன் கடன் அடிப்படையில் எரிபொருள் பெறும் கலந்துரையாடலில் திருப்தி - அமைச்சர் கம்மன்பில

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐக்கிய அமீரகத்துடன் கடன் அடிப்படையில் எரிபொருள் பெறும் கலந்துரையாடலில் திருப்தி - அமைச்சர் கம்மன்பில

அமீராக தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ENOC) குழும தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் அல் ஃபலாசி இடையேயான பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கடன் வசதியில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

நேற்றைய தினம்(19) எமிரேட் நேஷனல் ஆயில் நிறுவனத்தின் (ENOC) குழும தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் அல் ஃபலாசி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கம்மன்பில கலந்துரையாடலில் பங்கேற்றார்.

அமைச்சர் உதய கம்மன்பில தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருப்பதோடு, அவரது விஜயத்தின் போது கச்சா எண்ணெய் குறித்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் குறித்து அமைச்சர் கம்மன்பில மற்றும் இலங்கையில் உள்ள ஈரான் தூதாகர் ஹாஷேம் அஷ்ஜஸாதே இடையே ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னணியில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

நீண்ட கால கடன் வசதியுடனான இலங்கைக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் பெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக இந்த அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கம்மன்பில தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.