தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு!

தடுப்பூசி ஏற்றியவர்களை விட தடுப்பூசி ஏற்றாதவர்கள் 11 மடங்கு அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சிடிசி நிலையப் பணிப்பாளர் ரோஷெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடுமையான நோய் அல்லது இறப்புக்கு எதிராக கொவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறனை தெளிவாகக் காட்டும் ஒரு புதிய ஆய்வை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் வெளியிட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. கோடை காலப்பகுதியில் அமெரிக்காவில் டெல்டா பரவலாக இருந்ததால், ஆரம்ப நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது சற்று வீழ்ச்சியடைந்ததென்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் தடுப்பூசி ஏற்றலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு என்பன சரிவையும் காட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் தொற்றும் வீதமும் குறைகின்றது.

பல ஆய்வுகள் தடுப்பூசி ஏற்றலினால் செயல்திறன் அதிகரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் மொடர்னா, பைசர் , பயோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் என்பன ஏற்றப்படுகின்றன.

இவை கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதில் 86 சதவிகிதம் பங்களிக்கிறது. அதே போன்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதில் 82 சதவிகிதம் பங்களிக்கிறது.

ஆய்வின் முடிவுகளின்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதிலிருந்து 60 சதவிகித பாதுகாப்பை வழங்குகிறது. 95 சதவிகிதம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்க மொடர்னா பங்களிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.