தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம இடைச்சாலையின் பணிபுரிந்த காசாளர் ஒருவர் ரூ.14 லட்சம் பணத்துடன் காணாமல் போயுள்ளார்.
குறித்த அந்த இடத்தில் பணப் பொறுப்பில் இருந்த தலைமை காசாளர் பணத்துடன் காணாமல் போயுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் தலைமை பொறியாளரால் பண்டாரகம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக லங்கதீப செய்தி வெளியிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் 14 லட்சத்து 18 ஆயிரம் ரூபா காசாளர்களின் பாதுகாப்பு மற்றும் தினசரி வைப்புப் பெட்டியில் இருந்து திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் காணாமல் போன தலைமை காசாளர் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)