கல்முனை பிராந்தியத்தில் டெல்டா அபாயம்: பணிப்பாளர் சுகுணன் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்முனை பிராந்தியத்தில் டெல்டா அபாயம்: பணிப்பாளர் சுகுணன் எச்சரிக்கை!


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட PCR பரிசோதனை மாதிரிகளில் 95 வீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,


கடந்த 04ஆம் திகதி கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து புறப்பட்ட PCR மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


18 பிசிஆர் மாதிரிகளில் 17 பிசிஆர் மாதிரிகள் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்கும் ஒரு பிசிஆர் பரிசோதனை மாதிரி கொவிட் அல்பா வைரஸ் தொற்றுக்கும் உள்ளாகி உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியதும் மிகவும் அச்சுறுத்தலானதும் என்பதனால் பொதுமக்கள்  நிலைமையைக் கருத்திற்கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்வதோடு, சுகாதார நடைமுறைகளை  இறுக்கமாக பின்பற்றி தடுப்பூசியை முறையாகப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


-நூருள் ஹுதா உமர்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.