கொவிட் தொற்று நீங்கி நாடு திறக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப் போவதாக கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முன்னணி வகித்த கொழும்பு அபயராமய விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் (MURUTHETTUWE ANADA THERO) அறிவித்துள்ளார்.
அரசாங்கம் செல்கின்ற பயணத்தில் குடிப்பதற்கு தண்ணீர்கூட நாட்டில் மிஞ்சாது என்றும் அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தேசிய சொத்துக்களை பாதுகாப்பதே எமது நோக்கம். ஒவ்வொரு நாடுகளுக்கு அவசியமான வகையில் பிரித்து வழங்குவதை நாம் அனுமதிக்கமாட்டோம். அதனால் பொருளாதாரமும் பலப்படாது.
கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்தபோது தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் வழங்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுவதாகவே உறுதியளிக்கப்பட்டது.
இன்று அந்த அரசாங்கம் பழைய பாதையில் பயணித்தால் வீதிகளுக்கு இறங்கி போராட வேண்டியேற்படும். ஆனால் தற்போதைய கொவிட் நிலைமைக்கு மத்தியில் அதனை செய்ய மாட்டோம்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினை எதிர்த்து எதிர்காலத்தில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம்.
நாட்டைப் பாதுகாப்பதற்கு கொண்டுவந்த அரசாங்கம் உரியவாறு பாதுகாப்பை அளிக்காவிட்டால் மக்களிடம் உள்ள நம்பிக்கையும் மறைந்துபோகும்.
சௌபாக்கிய திட்டம் என்று சொன்னார்கள். ஆனால் போகிற போக்கில் குடிக்கத் தண்ணீர்கூட மக்களுக்குக் கிடைக்காத நிலைமையே ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
அரசாங்கம் செல்கின்ற பயணத்தில் குடிப்பதற்கு தண்ணீர்கூட நாட்டில் மிஞ்சாது என்றும் அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தேசிய சொத்துக்களை பாதுகாப்பதே எமது நோக்கம். ஒவ்வொரு நாடுகளுக்கு அவசியமான வகையில் பிரித்து வழங்குவதை நாம் அனுமதிக்கமாட்டோம். அதனால் பொருளாதாரமும் பலப்படாது.
கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்தபோது தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் வழங்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுவதாகவே உறுதியளிக்கப்பட்டது.
இன்று அந்த அரசாங்கம் பழைய பாதையில் பயணித்தால் வீதிகளுக்கு இறங்கி போராட வேண்டியேற்படும். ஆனால் தற்போதைய கொவிட் நிலைமைக்கு மத்தியில் அதனை செய்ய மாட்டோம்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினை எதிர்த்து எதிர்காலத்தில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம்.
நாட்டைப் பாதுகாப்பதற்கு கொண்டுவந்த அரசாங்கம் உரியவாறு பாதுகாப்பை அளிக்காவிட்டால் மக்களிடம் உள்ள நம்பிக்கையும் மறைந்துபோகும்.
சௌபாக்கிய திட்டம் என்று சொன்னார்கள். ஆனால் போகிற போக்கில் குடிக்கத் தண்ணீர்கூட மக்களுக்குக் கிடைக்காத நிலைமையே ஏற்படும் எனக் கூறியுள்ளார்.