கொரோனா நோயாளி வைத்தியசாலையில் இருந்து குதித்து தற்கொலை! கண்டியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா நோயாளி வைத்தியசாலையில் இருந்து குதித்து தற்கொலை! கண்டியில் சம்பவம்!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வந்த நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.


சில நாட்களாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கண்டி தேசிய வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் இருந்து  குதித்து இன்று (04) காலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


கடுமையான காயங்களுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


இவர் கண்டி - அலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 


மேலும் தற்கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.