கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம் - கம்பளையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம் - கம்பளையில் சம்பவம்!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி கம்பளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொத்மலை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர் நுவரெலியாவில் உள்ள கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடைசியாக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவன் (56) (55618) என தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி 33 வருடங்கள் காவல் சேவையில் இருக்கும் காவல் சார்ஜன்ட் சுப்பையா இளங்கோவன் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொத்மலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பூண்டுலோயா பகுதியில் வசிக்கும் காணாமல் போன பொலிஸ் சார்ஜன்ட் மூன்று பிள்ளைகளின் தந்தை மற்றும் சார்ஜண்டின் மனைவி பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிகின்றார்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் தனிமைபடுத்தப்பட்டு தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்ததும், தனது தந்தைக்கு மேலதிக சிகிச்சை தேவைப்பட்டதால் கம்பளை பொது வைத்தியசாலையில் கடந்த செப்டம்பர் 08 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாதவும் அவரின் மகன் தெரிவித்துள்ளார். 

தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே தினம், மருத்துவமனை நிர்வாகம் தனது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்ததாகவும், சிகிச்சை பெற்று வந்த தந்தை மருத்துவமனையில் இருந்து தப்பிவிட்டதாகவும் தகவல் அளித்ததாக காணாமல் போன சார்ஜென்ட்டின் மகன் தெரிவித்தார்.

தனது தந்தை மருத்துவமனையில் இருந்து தப்பிக்கவோ அல்லது தலைமறைவாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்று மகனும் அவரது மனைவியும் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியிடம் இதுபற்றி நாங்கள் வினவியபோது, ​​காணாமல் போன சார்ஜென்ட் நீண்டகால நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், சார்ஜன்ட் பயம் காரணமாக உறவினர் அல்லது நண்பரின் பாதுகாப்பில் மறைந்திருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், காணாமல் போன சார்ஜெண்டைக் கண்டுபிடிக்க கம்பளை மற்றும் கொத்மலை பொலிஸார் பல விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.