ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்காலத்தில் ஒரு பரந்த கூட்டணியாக முன்வருவதாகவும், வடமேல் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராக அவர் அந்த மாகாணத்திற்காக நிறைய செய்திருக்கிறார் என்றும் ஜயசேகர மேலும் தெரிவித்தார்.