
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று முறையற்ற விதத்தில் நடந்துகொண்ட சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.
அராஜகமான இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விசாரணையின் பின்னர் அவரை கைது செய்ய வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பு, அதுவரை அவரை பதவியில் இருந்து நீக்குமாறு வேண்டுகோள் முன்வைத்துள்ளது.
