மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டமை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று (14) வழங்கப்பட்டது. அவர். தனது கடமைகளை நாளை (15) பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த ரிட் மனுவினை தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.