ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்களின் தலைவரென அறியப்பட்ட சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை, எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹதியாவின் விளக்கமறியவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. அவருடன் இன்னும் 06 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.