முஸ்லிகளின் கடவுளான அல்லாஹ் தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று தெரிவித்த ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் வாய்திறக்கவில்லை ஏன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
நாடாளுமன்றில் இன்று (22) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி சர்வதேச நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களுடன் பேசத்தயார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதையிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
எந்த வாக்குறுதிகளை அளித்தாலும் ஜி.பி.எஸ் வரிச்சலுகை இழக்கப்படுவது உறுதி எனவும் அதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மீது விசாரணை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.