ஞானசார தேரர் அவர்களின் இக்கூற்றானது பொது மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் அதனைத் தொடர்ந்து இந்நாட்டில் வாழும் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளையும், சவால்களையும் நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.
எனவே, உரிய அதிகாரிகள் குறித்த தேரரின் கூற்று தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இந்நாட்டின் பாதுகாப்பையும், இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும் மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
அத்துடன், குறித்த தேரர் இஸ்லாம் பற்றி முன்வைத்திருக்கும் அடிப்படையற்ற குற்றச்சாற்றுக்களுக்கான பதில்களை வெகு விரைவில் நாம் வழங்குவோம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா