உயர்த்தப்படவுள்ள பால்மா உட்பட ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் புதிய விலை இது தான்!
Posted by Yazh NewsAdmin-
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை துணைக்குழுவில் ஒப்புக்கொள்ளப்பட்ட விலை திருத்தங்கள் பின்வருமாறு.
ஒரு கிலோ பால் மா ரூ. 200 இனால் அதிகரிக்கப்படும்
ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.10 இனால் அதிகரிக்கப்படும்
சீமேந்து ரூ. 50 இனால் அதிகரிக்கப்படும்
சமையல் எரிவாயு ரூ. 550 இனால் அதிகரிக்கப்படும்
பால் மா, சீமேந்து, கோதுமை மாவு மற்றும் சமையல் எரிவாயு ஆகியவைக்கு பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.