நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி - மீண்டுமொரு கொரோனா அலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி - மீண்டுமொரு கொரோனா அலை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வந்த பின்னர் நாட்டை மீண்டும் திறப்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்குவார் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மக்கள் சுகாதாரச் சட்டங்களை கண்டிப்பாக கடைப்பிடித்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புத்தாண்டு காலத்தைப் போல மக்கள் செயல்பட்டால், மீண்டுமொரு கொரோனா அலைய தவிர்க்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று நாட்டில் திருப்திகரமாக கொரோனா கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் கொரோனா பர மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

நாட்டைத் திறக்க சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 50% பேர் ஏற்கனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.