
மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மக்கள் சுகாதாரச் சட்டங்களை கண்டிப்பாக கடைப்பிடித்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புத்தாண்டு காலத்தைப் போல மக்கள் செயல்பட்டால், மீண்டுமொரு கொரோனா அலைய தவிர்க்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று நாட்டில் திருப்திகரமாக கொரோனா கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் கொரோனா பர மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
நாட்டைத் திறக்க சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 50% பேர் ஏற்கனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)