தேர்தல் முறை மற்றும் சட்டங்களின் திருத்தம் மேற்கொள்ளும் குழுவில் ஹக்கீம் இணைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல் முறை மற்றும் சட்டங்களின் திருத்தம் மேற்கொள்ளும் குழுவில் ஹக்கீம் இணைப்பு!


தேர்தல் முறைகளிலும், சட்டங்களிலும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்று (22) புதிதாக இருவர் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.


சிறுபான்மையின கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பிரஸ்தாப பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இந்தத் தெரிவுக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இடம்பெற வேண்டியதன் அவசியம் ஆரம்பத்திலிருந்தே பல தரப்பினராலும்  வலியுறுத்தப்பட்டு வந்தது.


இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரஸ்தாப தேர்தல் சட்டம், தேர்தல் முறைமை சம்பந்தமான தெரிவுக் குழுவின்முன் தோன்றி சாட்சியமளிக்க இருக்கின்றது.


இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவுக்குழுவின் முன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாக்கு மூலங்களை நெறிப்படுத்துவார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.