ஓவல் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேட்டை செய்த ஜார்வோ கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓவல் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேட்டை செய்த ஜார்வோ கைது!

ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் ஜார்வோ என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் இந்திய அணிக்குரிய சீருடையுடன் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டின் போது அத்துமீறி ஊடுருவினார். அதனால் லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியைப் பார்க்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, 4-வது டெஸ்ட் நடக்கும் லண்டன் ஓவலிலும் அவர் நேற்று திடீரென மைதானத்திற்குள் ஓடிவந்து பந்து வீசுவது போல் சைகை காட்டினார். அத்துடன் வந்த வேகத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீதும் மோதினார். பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் அவரைப் பிடித்துச் சென்றனர். இதனால் 5 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மைதானத்திற்குள் திடீரென நுழைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள ஜார்வோவை லண்டன் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.