தெரணியகல பிரதேச சபை தவிசாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பெண்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெரணியகல பிரதேச சபை தவிசாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பெண்!!


தெரணியகல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் லக்ஸ்மன் ராஜகருணாவின் மூக்கை பெண்ணொருவர் துண்டாடிய சம்பவம் நேற்று (04) பதிவாகியுள்ளது.


இதனையடுத்து அவர், தெரணியகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.


பிரதேச சபையின் தவிசாளர் தனது வாகனத்தில் தெரணியகல நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, குறித்த பெண் வாகனத்தை வழிமறித்துள்ளார்.


இதன் பின்னர் குறித்த இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், சந்தேகநபரான பெண்,  ஆயுதமொன்றில் தவிசாளர் மீது தாக்குதல் நடத்திய போது, அவரின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது.


எனினும் தவிசாளரும் அப்பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதால் அப்பெண்ணும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவத்துக்கு இருவருக்கும் இடையிலான சட்டவிரோத உறவே காரணமாக இருக்கலாம் என சந்தேகித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.