நாட்டு மக்களுக்கு மேலுமொரு நெருக்கடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்களுக்கு மேலுமொரு நெருக்கடி!


கோதுமை மா பற்றாக்குறை காரணமாக அதன் ஊடாக தயாரிக்கப்படும் உணவுப்பண்டங்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலினால் சில கம்பனிகள் மாவை பதுக்கி வைத்துள்ளதாக சங்கம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் தலையீடு இன்றி விலை அதிகரிப்புக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் தற்போது 87 ரூபாவுக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்றது. சில இடங்களில் 107 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சில பகுதிகளில் உள்ள பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.