மின்சார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்சார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

மின்சார பாவனையாளர்கள் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சார சபை கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக மின்சார அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கட்டணத்தை செலுத்துவதற்காக பாவனையாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இன்றும் இரண்டு மூன்று மாதங்கள் இவ்வாறு சென்றால் நாம் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி வரும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சுமார் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் அறவிடப்படவுள்ளது. எனினும் அதற்கு நாம் வட்டி அறவிடவில்லை. 12% இடைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை நாம் ஊக்கப்படுத்தியுள்ளோம். கட்டணம் செலுத்த கூடியவர்களும் செலுத்துவதில்லை. அது தான் பிரச்சினை. முடிந்தளவில் மின்சார கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.