
சவேந்திர சில்வா மேலும் கூறுகையில், உள்ளூரில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்க இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த தடுப்பூசிகளைக் கோரும் எவரும் தங்கள் வெளிநாட்டு கல்வி தொடர்பான ஆவண சான்றுகளை வழங்குவது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார்.
நேற்றையதினம், உள்ளூர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் நாரஹேன்பிட்டாவில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு முன்பாக திரண்டு மொடேர்னா தடுப்பூசி கேட்டு இராணுவத்துடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
மொடேர்னா தடுப்பூசி தங்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் தெரிவித்ததை அடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ வைத்தியசாலைகளில் மொடேர்னா தடுப்பூசி வழங்குவதற்கு முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணத்தால் அவ்வாறு செய்ய முடியாது என்று இராணுவம் தெரிவித்ததாக கூறினார்.
இந்த தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இதுபற்றி விசாரிக்கப்பட்ட போது, தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பிட்ட தடுப்பூசி போட ஆணைக்குழுவிடம் எந்த கோரிக்கையும் விடுக்கப்பட இல்லை என்று தெரிவித்தார்.