க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்காது என்ற தீர்மானம், பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்று அதிபர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்தார்.
இன்று (20) விசேட அறிக்கையொன்றை வழங்கிய அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், ஆன்லைன் கல்வி முறையின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கற்பிப்பது ஒரு வெற்றிகரமான முறை அல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், பாடசாலைகளை மீள ஆரம்பிக்காமல் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது கிராமப்புற திறமைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு கடுமையான அநீதி என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மூன்று மாதங்கள் கழிந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)