புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான செய்தி!


க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்காது என்ற தீர்மானம், பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்று அதிபர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்தார்.


இன்று (20) விசேட அறிக்கையொன்றை வழங்கிய அவர் இவ்வாறு கூறினார்.


மேலும், ஆன்லைன் கல்வி முறையின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கற்பிப்பது ஒரு வெற்றிகரமான முறை அல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


அதேநேரம், பாடசாலைகளை மீள ஆரம்பிக்காமல் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது கிராமப்புற திறமைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு கடுமையான அநீதி என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மூன்று மாதங்கள் கழிந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.