லொக்டவுன் காலகட்டத்தில் அரசுக்கு எத்தனை ஆயிரம் கோடி நட்டம் தெரியுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லொக்டவுன் காலகட்டத்தில் அரசுக்கு எத்தனை ஆயிரம் கோடி நட்டம் தெரியுமா?

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்ளேயே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கான நட்டம் 700 கோடி ரூபா என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.