பல்ஸ் ஆக்சிமீட்டர்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அரசு நிர்ணயிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்ஸ் ஆக்சிமீட்டர்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை அரசு நிர்ணயிப்பு!

பல்ஸ் ஆக்சிமீட்டர்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அரசு நிர்ணயித்துள்ளது.

ஆக்ஸிமீட்டர் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 3000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களுக்கான தேவை சமீபத்தில் அதிகரித்துள்ளது.

போலி பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களின் விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான மோசடியும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளூர் சந்தையில் அதிக விலைக்கு ஆக்ஸிமீட்டர்ள் விற்கப்பட்டதும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

எனவே, அரசாங்கம் தலையிட்டு இப்போது ஆக்ஸிமீட்டர்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது. ( யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.