ஐக்கிய தேசிய கட்சியின் 75ஆவது ஆண்டு பூர்த்தி; கட்சி தலைவரான ரணில் வழங்கிய உரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐக்கிய தேசிய கட்சியின் 75ஆவது ஆண்டு பூர்த்தி; கட்சி தலைவரான ரணில் வழங்கிய உரை!


அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


கட்சியின் 75 ஆவது ஆண்டு பூர்த்தி தின நிகழ்வுகள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.


இலங்கையை முன்னேற்ற பாதையில் இட்டு செல்வதற்கு புதிய வேலைத்திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கவுள்ளது. 2020 நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி பாரிய பின்னடைவை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


தோல்வி ஏற்பட்டதற்கான காரணிகள் தொடர்பில் ஆராய்ந்ததில் பல்வேறு புதிய விடயங்கள் தோன்றியுள்ளன.


தற்போதைய அரசியல் முறை, தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினை மக்கள் நிராகரித்துள்ளனர்.


நாடு தொடர்பில் சிந்தித்து செயலாற்றக்கூடியவர்களையே பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.