ஆசிரியர்களுக்கான ஐயாயிரம் ஊக்குவிப்பு கொடுப்பனவைப் பெற 15 பொறுப்புகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர்களுக்கான ஐயாயிரம் ஊக்குவிப்பு கொடுப்பனவைப் பெற 15 பொறுப்புகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது!


ஆசிரியர்களுக்கான ரூபா ஐயாயிரம் ஊக்குவிப்பு கொடுப்பனவைப் பெற நிறைவேற்ற வேண்டிய 15 பொறுப்புகள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.


ஒன்லைனில் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல், க.பொ.த உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல், பாடசாலையில் நடைமுறையிலுள்ள விஷேட திட்டங்களுக்கு பங்களிப்பு, கடமைத் தேவைகள் குறித்த கூட்டங்களில் கலந்துகொள்வது, புதிய தேசிய பாடசாலை தொடர்பான செயற்பாடுகள், தடுப்பூசி செயற்றிட்டம் மற்றும் பாடப் புத்தக விநியோகம் ஆகியவை உட்பட 15 பொறுப்புகளை குறித்த சுற்றறிக்கை பட்டியலிட்டுள்ளது.


அதிபர்கள் தங்கள் கடமைகளில் திருப்தி அடைந்தால், சம்பந்தப்பட்ட ஊக்குவிப்புத் தொகையை வழங்க வலயக் கல்வி பணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊக்குவிப்புத் தொகையைப் பெறத் தகுதியுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு அதனைச் செலுத்தும் அதிகாரம் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.