பொலன்னறுவை மாவட்டத்தின் பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி களஞ்சியசாலைகளை சோதனை செய்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்லா தலைமையிலான குழுவினர், அந்த கிடங்குகளில் இருந்து கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் தொன் அரிசியை கைப்பற்றியுள்ளனர்.
அரசால் விதிக்கப்பட்ட விலையில் அரிசி சந்தைக்கு வழங்கப்படாததால், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டு பின்னர் அதனை அரசுடைமையாக்கினர்.