அரச தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு எதிராக கொதித்தெழுந்த இராஜ் - அரசியல்வாதிகள் செல்லுமிடம் மற்றும் சாப்பிடுவதை பார்க்க எங்களுக்கு தேவையில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு எதிராக கொதித்தெழுந்த இராஜ் - அரசியல்வாதிகள் செல்லுமிடம் மற்றும் சாப்பிடுவதை பார்க்க எங்களுக்கு தேவையில்லை!

அரசாங்க அமைச்சர்களால் தவறுகள் இருந்தால், அவற்றை அரச ஊடகங்களில் விமர்சிக்க வாய்ப்பு இருப்பதாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இசைக்கலைஞர் இராஜ் வீரரத்ன பதிலளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பதிலளித்த அவர், சுதந்திர தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் செய்திகளை இனி பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

“நீங்கள் இதனை பொறுப்புடனா கூறிகின்றீர்கள்?

அரச தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள் இவ்வாறு அரசின் சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் அவர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தலாக அமையுமா?

நீங்கள் அவர்களுக்காக இதனை பொறுப்பு கூறுவீர்களா? இல்லையெனில் அவர்கள் தொழில் இழந்து வீடுகளுக்கு தான் செல்ல வேண்டும்.

ITN மற்றும் ரூபவாஹினி அலைவரிசையினை பார்க்க முடியாதளவு இன்று மாறியுள்ளதன் காரணம், நீங்கள் செல்லுமிடங்கள் மற்றும் சாப்பிடுவது போன்றவற்றை மக்கள் பார்ப்பதற்கு எந்தவித தேவையும் இல்லை.

அப்படியே நாட்டில் உண்மை நிலையினை அறிக்கையிட அராஅ தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சக்தி மற்றும் தைரியத்தினை வழங்க பிரார்த்திக்கின்றேன்”

(யாழ் நியூஸ்) 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.