நாளை முதல் அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாளை திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கொடுப்பனவு பற்றிய தகவலை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த முடக்க நிலைகளின் போது இருமுறை 5000.00 ரூபா வழங்கப்பட்டிருந்த போதிலும் இம்முறை 2000.00 ரூபா மாத்திரமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.