முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தனவுக்கு ஆப்கானிஸ்தானில் மிக முக்கிய பதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தனவுக்கு ஆப்கானிஸ்தானில் மிக முக்கிய பதவி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவ்வறிவிப்பை வெளியிட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மே மாதத்தில் அவிஷ்கா குணவர்தன மீதாம இரு ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்ததாகவும், அவர் கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுவதாகவும் அறிவித்தது.

இவர் ஆறு டெஸ்ட் மற்றும் 61 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார், அவர் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் குழுவில் செயல்பட்டுவந்தார்.

ஆப்கானிஸ்தான் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான் போராளிகள், முன்பு இருந்ததைப் போலவே கிரிக்கட் இனை தொடரலாம் என்று அறிவித்திருந்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.